கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்றும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
இதன்படி, இறுதியாக 4 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
இதன்படி, இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 255ஆக அதிகரித்துள்ளது.
90 வயதான பெண்ணொருவரும், 60, 78 மற்றும் 75 வயதுகளையுடைய மூன்று ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.